காவல்துறை

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத்தின் உலு திராம் காவல் நிலையத்தில் உள்ள ஆயுதங்களைக் கைப்பற்ற ஜமா இஸ்லாமிய உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் ஆடவர் தாக்குதல் நடத்தியதாக அரச மலேசியக் காவல்துறைத் தலைவர் ரஸாருதின் ஹுசேன் கூறியுள்ளார்.
ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத்தின் உலு திராம் காவல் நிலையத்தில் மே 17ஆம் தேதி அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், காவலர்கள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அவதூறாகப் பேசிய விவகாரத்தில் திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராதிகா சரத்குமார் தரப்பில் அவரது மேலாளர் நடேசன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
டொராண்டோ: சீக்கியர்களுக்கான தனிநாடு கோரிக்கையை ஆதரித்த முக்கிய நபரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஓர் இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கனடிய காவல்துறை சனிக்கிழமையன்று (மே 11) தெரிவித்தது.
மதுரை: பெண் காவல்துறை ஆய்வாளரின் வீட்டிற்குள்ளேயே மர்ம மனிதர்கள் புகுந்து 450 சவரன் தங்க நகைகளையும் ரூ.5 லட்ச ரூபாய் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.